Monday 21 December 2009

யாழ் நூலகக் கட்டடம், யாழ்ப்பாணம்.

சும்மாயிருக்கும் நேரங்களில் ஏதாவது புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் பள்ளிக்கூட நாள்முதல் என்னுடன் இருந்து வருகிறது. ஹாட்லிக் கல்லூரியின் கயவர்களினால் அழிக்கப்பட்டதன் பின் சேகரிக்கப்பட்ட புத்தகங்ககளைக் கொண்டு மீள உருவாக்கப்பட்ட சிறு நூலகமும், பள்ளிக்கூடம் மற்றும் ரியூசன் வகுப்புகளிற்கு செல்லும் வழியிலிருந்த சதாவதானி கதிரைவேற்பிள்ளை சனசமூக நிலையமும், போரூட் தொண்டு நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட நூலகமும், மந்திகையில் இருந்த பொது நூலகமும் எனது முக்கிய பொழுதுபோக்கிடங்களாக இருந்தன.


அன்றிலிருந்து நூலகங்களைக் கண்டால் ஒருமுறை உள்ளே போய்ப் பார்ப்பது எனது வழமை. ஆனாலும் யாழ்ப்பாணத்தின் அறிவுத்தேடலின் சாட்சியாகவிருந்து கயவர்களினால் அழிக்கப்பட்டதன் பின் வெளியுலகத்திற்கு கண் துடைப்பதற்காக வெள்ளையடிக்கப்பட்ட வெற்றுக் கூடாகவிருக்கும் யாழ் நூலகக் கட்டடம் ஏனோ என்னை உள்ளே ஈர்க்கத் தவறியது.

No comments:

Post a Comment