Wednesday 16 December 2009

முறிகண்டிப் பிள்ளையார் கோவில், வன்னி

முறிகண்டிப் பிள்ளையார் கோவில்

நீண்ட பயணங்கள் தடங்கல்களின்றி அமையவும் போகின்ற காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறவும் கடவுளை வேண்டிக்கொள்வது நீண்ட காலமாக தமிழர்களிடம் இருந்துவரும் பழக்கமாகும். அவ்வாறான வழிபாட்டிற்கு இலங்கையின் வடபகுதியான வன்னியின் மிகவும் பிரசித்தமான கோவில்களிலொன்றுதான் முறிகண்டிப் பிள்ளையார் கோவில். வடபகுதியின் பிரதான நெடுஞ்சாலையான யாழ்-கண்டி A9 வீதியில் கிடுகினால் வேயப்பட்ட மிகவும் எளிமையான அக்கோவில் அவ்வழியால் செல்லும் அனைவரும் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி வழிபட்டுச் செல்லும் ஒரு தலமாகும். 2008 வரை கோவிலும் அதன் சுற்றாடலில் இருக்கும் சிற்றுண்டிச்சாலைகளும் எப்பொழுதும் கலகலப்பாக சனக்கூட்டம் நிறைந்து காணப்படும்.

No comments:

Post a Comment