Wednesday 9 December 2009

வல்லை முனியப்பர் கோவில்


யாழ் கடனீரேரியானது யாழ் தீபகற்பத்தினை வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என மூன்று தனித்து நிற்கும் நிலப்பரப்புக்களாகப் பிரித்து வைத்திருக்கின்றது. பருத்தித்துறை-யாழ்ப்பாணம் (B71) வீதி ஊடறுத்துச் செல்லும் கடனீரேரிப் பகுதியான வல்லைவெளி வரட்சியான பரந்ததொரு வெளியாகும். அந்த வெளியின் மத்தியில் இருக்கும் ஒரேயொரு பெருமரமும் அதன் கீழிருக்கும் வல்லை முனியப்பர் கோவிலும் அவ்வழியால் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். பண்டைய காலந்தொட்டு அவ்வழியால் பயணம் செய்பவர்கள் வல்லை முனியப்பரிடம் தங்கள் பயணம் இனிதே நிறைவேற வேண்டுவதற்குத் தவறுவதேயில்லை.

பூகோளவியல் அமைவிடம்: 9° 47' 4.89" வடக்கு (அகலாங்கு), 80° 8' 12.74" கிழக்கு (நெட்டாங்கு)

No comments:

Post a Comment