Showing posts with label தீவகம். Show all posts
Showing posts with label தீவகம். Show all posts

Friday, 4 December 2009

நயினை நாகபூஷணி அம்மன் கோவில், நயினாதீவு

தீவில் காலடி வைத்ததும் கிடைக்கும் ஆலய தரிசனம்


ஆலயத்தின் முகப்புத்தோற்றம்

ஆலயத்தின் பக்கவாட்டுத் தோற்றம்

அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருவுருவங்களில் ஒரு தொகுதி

பூகோளவியல் அமைவிடம்: 9° 37' 8.76" வடக்கு (அகலாங்கு), 79° 46' 27.31" கிழக்கு (நெட்டாங்கு)

Geographic coordinate: +9° 37' 8.76", +79° 46' 27.31" (9.619100, 79.774254)

Thursday, 3 December 2009

தீவகம், யாழ்ப்பாணம்

யாழ் தீபகற்பத்திற்கு மேற்காக பாக்கு நீரிணையில் அமைந்துள்ள சிறு தீவுகள் கூட்டாக தீவகம் என்ற பொதுப்பெயரால் அறியப்படுகின்றன. காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு முற்பட்ட காலத்தில் மிகச்சிறந்த கடலோடிகளாக விளங்கிய தென்னாசியாவின் தமிழ் மன்னர்களும், வணிகர்களும் தங்கிச்செல்லும் இளைப்பாறும் தளங்களாக விளங்கிய இத்தீவுகள் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டன. இன்றும் உலகின் பல்வேறு இடங்களிலும் வணிகத்திலும், கல்வியிலும் மற்றும் அறிவுசார் தொழில்களிலும் சிறந்த விற்பன்னர்களாக விளங்கும் தீவக மக்கள் தங்கள் ஊரின் பெருமையை பறைசாற்றிக் கொன்டிருக்கிறார்கள். மேலும் கடின உழைப்பாளிகளான தீவக மக்கள் விவசாயத்திலும் சளைத்தர்கள்அல்ல.

பண்ணை வழி

தீவகத்தின் முக்கிய தீவுகளாக நெடுந்தீவு, வேலணை (ஊர்காவற்றுறையையும் உள்ளடக்கியது), புங்குடுதீவு, நயினாதீவு, காரைதீவு (காரைநகர்), மண்டைதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகியன கருதப்படுகின்றன. இத்தீவுகளில் மண்டைதீவு, வேலணை மற்றும் புங்குடுதீவு சாலைகளினால் இணைக்கப்பட்டுள்ளதுடன் பண்ணை வழியால் யாழ் நகரத்துடன் இணைந்துள்ளன. இவ்வாறே காரைதீவு பொன்னாலையில் கடல்வழிச் சாலையினால் யாழ் தீபகற்பத்துடன் இணைந்துள்ளது.

மண்டைதீவு

வேலணை

புங்குடுதீவு

இங்குள்ள புகைப்படங்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழையில் வயல்களில் நீர் நிரம்பியிருக்கும்போது எடுக்கப்பட்டன.