Thursday 3 March 2011

வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி - சில்வண்டு

இயற்கையுடன் விளையாடி வளர்ந்த நாட்களின் நினைவில் சில்வண்டின் ரீங்காரம் மறக்க முடியாததொன்று. இளவேனிற்கால மாலை நேரங்களில் துணையைக் கவர்ந்திழுக்க ஆண் சில்வண்டுகள் எழுப்பும் ரீங்காரம் கிராமங்களின் அமைதியைச் சீண்டிப்பார்க்கும். மரங்களின் நிறத்துடன் ஒன்றிப்போயிருப்பதாலும் அருகில் சென்றால் ரீங்காரத்தை நிறுத்திவிடுவதாலும் சில்வண்டுகள் எளிதில் புலப்படுவதில்லை.

சில்வண்டு

சில்வண்டு